விவாக நிகழ்ச்சி 65-01-16x 1. இந்த மணப்பெண்ணை இந்த மணமகனுக்கு மணமக்களாக்க நான் யாரிடம் கேட்க வேண்டும்? (மணமகளின் தகப்பன், “நான், அவளுடைய தந்தை” என்று பதிலளிக்கிறார்” - ஆசி.) 2. பிரியமானவர்களே, பரிசுத்த பவுல் சொன்ன வண்ணம் தேவனுடைய பிரசன்னத்தில் புருஷனும் ஸ்தீரியும் பரிசுத்த விவாகத்தில் ஒன்றாக இணைவதற்காக, இது அனைத்து மனிதர்களிடையே கனத்துக்குரியதாய் இருக்கிறது. ஆகவே நாம் இங்கு, அது யாராலும் விரும்பத்தகாததாகவோ அல்லது இலகுவாகவோ அல்ல, ஆனால் பயபக்தியுடன், விவேகத்துடன், அறிவுரையுடன், நிதானமாக தேவ பயத்தில் வந்துள்ளோம்.3. இந்த பரிசுத்த விவாகத்தில் நீங்கள் சட்டபூர்வமாக இணையக் கூடாதபடி ஏதேனும் தடை உங்களுக்கு தெரிந்திருந்தால், இப்பொழுது அதை நீங்கள் அறிக்கை செய்யலாம். பரிசுத்த நிலையில் இந்த இரண்டு நபர்களும் இப்பொழுது இணைவதற்காக வந்துள்ளனர். இந்த பரிசுத்த விவாகத்தில் ஏன் அவர்கள் சட்டபூர்வமாக இணையக் கூடாது என்று நியாயமான காரணத்தை காட்டக்கூடியவர்கள் யாராவது இங்கிருந்தால், இப்பொழுது அவர்கள் பேசட்டும் அல்லது இனி எப்போதும் அமைதியாக இருக்கட்டும். 4. இந்த பரிசுத்த விவாகத்தில் நீங்கள் சட்டபூர்வமாக இணையக் கூடாதபடிக்கு முழு இருதயங்களின் இரகசியங்கள் வெளிப்படும் போது, நியாயத்தீர்ப்பு நாளில் நீங்கள் உறுதியாக பதிலளிக்கையில், நான் உங்கள் இருவரிடமும் கேட்டதை குறித்து கண்டனம் செய்வேன், ஏனெனில் தேவனுடைய வார்த்தை அனுமதிப்பதை விட மற்றபடி இணையும் எந்த நபர்களுக்கும், அவர்களுடைய விவாகம் சட்டபூர்வமானது அல்ல என்று உங்களுக்கு உறுதியளிக்கப்படுகிறது. 5. ஆனாலும் நான் விசுவாசிக்கிறேன் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் இந்த பரிசுத்தமான கடமையின் முறைமைகளை கருத்தில்கொண்டு, நீங்கள் பயபக்தியுடன், விவேகத்துடன், ஞானத்துடன் தேவபயத்தில் பிரவேசிக்க நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்கள், நான் உங்களுக்கு விவாக உடன்படிக்கையை அறிவிக்கிறேன். உங்களுடைய வலது கரங்களை நீங்கள் இணைத்திருக்கும் போது நீங்கள் அதை கூறுங்கள். (மணமகனும் மணமகளும் தங்கள் வலது கரங்களை ஒன்றாக இணைக்கின்றார்கள் - ஆசி.) 6. நீ இந்த பெண்ணை உன்னுடைய சட்டபூர்வமான மனைவியாக ஏற்றுக்கொண்டு, இந்த விவாக பந்தத்தில் இணைந்து ஜீவிக்கவும்; வியாதியிலும், சுகத்திலும், செல்வத்திலும் வறுமையிலும், மற்றும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அன்பு செய்து மரியாதை செய்து, நீ உயிரோடிருக்கும் வரை அவளை பற்றி கொண்டிருப்பேன் என்று உறுதியளிக்கிறாயா? (“நான் செய்வேன்” என்று மணமகன் உறுதியளிக்கிறான். - ஆசி.) 7. நீ இந்த ஆணை உன்னுடைய சட்டபூர்வமான கணவனாக ஏற்றுக்கொண்டு, இந்த விவாகத்தில் இணைந்து ஜீவிக்கவும்; வியாதியிலும் சுகத்திலும், செல்வத்திலும் வறுமையிலும், மற்றும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அன்பு செய்து, மரியாதை செய்து, நீ உயிரோடிருக்கும் வரை அவரை பற்றிக் கொண்டிருப்பேன் என்று உறுதியளிக்கிறாயா? (“நான் செய்வேன்” என்று மணமகள் உறுதியளிக்கிறாள். - ஆசி.) 8. உங்கள் மத்தியில் இந்த உடன்படிக்கை செய்ததை, எப்பொழுதும் காத்துக் கொள்ள உங்களிடமிருந்து ஒரு அடையாளம் எனக்கு வேண்டும். (இரண்டு மோதிரங்கள் ஊழியக்காரரின் வேதாகமத்தில் வைக்கப்பட்டது, பின்பு மணமகனுடையது மணமகளுக்கும் மணமகளினுடையது மணமகனுக்கும், கொடுக்கப்பட்டது - ஆசி.) இப்பொழுது தேவனிடம் திரும்புவோம், மறுபடியுமாக உங்களுடைய கரங்களை நீங்கள் இணைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். 9. சர்வ வல்லமையுள்ள தேவனே, முதல் மனிதனுக்கும் ஸ்திரீக்கு விவாகம் செய்து, உம்முடைய சொந்த சிருஷ்டியை ஒன்றிணைத்தீர் ஏதேன் தோட்டத்தில். இந்த விவாகம் காலம்வரைக்கும் அந்த கட்டளை செயல்பட்டு வருகிறது என்பதை இன்று நாங்கள் உணருகின்றோம். மேலும், பிதாவே, இருதயத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கக்கூடியவர் நீர் மட்டுமே. அன்பான பரலோக பிதாவே, உம்முடைய அறிவுரைப்படி இது செய்யப்பட்டது, இந்த கிறிஸ்தவ வாலிப மகனையும் கிறிஸ்தவ மகளையும் ஒன்றாக அழைத்து வந்து, இன்று ஒன்றிணைத்து இந்த பரிசுத்த நிகழ்ச்சி மூலமாக வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் கணவன் மனைவியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 10. நீர் அவர்களையும் ஆசீர்வதித்து, அவர்களுடைய வீட்டையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, அவர்கள் அண்டை வீட்டார்க்கு முன்பாக முன்மாதிரியாகவும் ஜீவிக்கவும் நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் ஜீவிக்கும் இந்த நாளில், நீதிமன்றங்களில் விவாகரத்து மிக அதிகமாகவும், நிரம்பியும் இருக்கிற போது, இந்த வாலிப மகனும் மகளும் அப்படி இருக்க கூடாது. தேவனே, அவர்களுக்கு மகிழ்ச்சியையும் சுகத்தையும் அருளும். கர்த்தாவே, ஆதியில் நீர் எங்களுக்கு கட்டளையிட்டபடி, பூமியில் பலுகி பெருகவும், இரட்டிப்பாய் அவர்கள் கனிகொடுக்கச் செய்யும். மேலும் ஈசாக்கையும் ரெபெக்காளையும் ஆசீர்வதித்து அவர்கள் விசுவாசமுள்ள பிள்ளைகளை பெற்றெடுத்தது போல, இந்த தம்பதிகளும் கூட அவ்விதம் இருக்கட்டும். அவர்களை ஆசீர்வதிக்கும்படி, நாங்கள் ஜெபிக்கின்றோம். 11. மேலும் இப்பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனால் எனக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் வல்லமையினால், அவருடைய ஊழியக்காரனாக, ஒரு தேவதூதனால் எனக்கு ஊழியம் கொடுக்கப்பட்டதால், இந்த மனிதனையும் ஸ்திரீயையும் கணவன் மனைவியாக நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அறிவிக்கிறேன். ஆமென். 12. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் விவாகமாகிவிட்டீர்கள். (தம்பதியர் முத்தமிட்டு பின்பு, சபையாரின் முன் திரும்புகிறார்கள். பியானோ கலைஞர் விவாக அணிவகுப்பு இசைக்க தொடங்குகிறார்-ஆசி.) தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன். (மணமகனும் மணமகளும் மற்றும் உடனிருந்தவர்களுடன் சபைக்குள் நடந்து சென்றார்கள்) நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். 13. அன்புள்ள தேவனே, இன்று நாங்கள் சாட்சியாக இருக்கையில், இந்த இரண்டு இருதயங்களும் ஒன்றுபட்டு துடிக்கட்டும். நாங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்திய பின்பு, அவர்களுடைய வீட்டிலிருந்து இந்த வாலிப மகனையும் மகளையும் அழைத்து அவர்களுக்கென்று ஒரு சொந்த வீட்டை அமைத்துக் கொள்ள அனுப்புகிறோம். ஓ தேவனே, இயேசு அவருடைய மணவாட்டியை பெற்றுக் கொள்ள வரும்போது, ஒரு நாள் அங்கு மற்றொரு மகத்தான ஊர்வலம் நடக்கும் என்பதை நாங்கள் நினைத்து பார்க்கின்றோம். இந்த வாலிப பெண் அவளுடைய விவாக உடையில் களங்கமற்று நிற்பதை நாங்கள் காணும் போது, உலக காரியங்களிலிருந்து நம்முடைய கறைப்படாத ஆத்துமாவை காத்துக் கொள்ளுவோம். நாம் நேசிக்க கூடிய தேவனால் நாம் நேசிக்கப்படுவதற்கும் அதை அருளும், கர்த்தாவே. இப்போதும் நாங்கள் ஜெபிக்கிறோம். உம்முடைய ஆசீர்வாதம் எங்கள் எல்லோர் மேலும் தங்கவும் எங்கள் ஜீவியம் அந்த நேரத்திற்காகவும் அந்த மகத்தான நிகழ்வில் பங்கு கொள்ளவும் இது ஒரு அடையாளமாய் உள்ளது. ஆமென். இப்போது அந்த வேளைக்காக நாங்கள் ஜீவிக்க எங்கள் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தும் உம்முடைய ஆசீர்வாதம் இருக்கும்படி இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. (சகோதரன் பிரன்ஹாம் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து கருத்துகளை சொல்கிறார் - ஆசி.) 14. சகோதரி சிம்சோன் (Simpson), ஒரு அருமையான மருமகனுக்காக உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க நான் விரும்புகிறேன். ஒரு அற்புதமான மனிதனை போல் தெரிகிறார். மேலும் சகோதரன் சிம்சோன் உங்களுக்கும் தான். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மணமகனின் தாய், தகப்பன், யாராவது இங்கு இருக்கின்றார்களா? (“இல்லை அவர்கள் வரவில்லை” என்று ஒருவர் கூறுகின்றார்-ஆசி.) ஓ, நல்லது, பாருங்கள் அங்கு நம்முடைய சகோதரன் போல மற்ற பிள்ளைகள் வாழ்த்துதலில் நிற்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள்? 15. நல்லது, தொடர்ந்து நாம் சபையில் இருக்க வேண்டும் போல தெரிகின்றது. இல்லையா? யாவரும் - யாவரும் கூடியுள்ளன, அவர்களுடைய விவாகத்திற்கு பின்பு பிரசங்கிக்க இது ஒரு அருமையான நேரமாக உள்ளது (இல்லையா?) 16. நல்லது, இப்பொழுது நான் பினீக்ஸ்க்கு (Phoenix) செல்ல வேண்டும், அங்கு சென்று சிலவற்றை தொடங்க வேண்டும். நாளை பிற்பகல் வெஸ்ட்வர்ட் ஹோ பால்ரூமில் (Westward Ho Ballroom) ஆராதனை தொடரும். அது மட்டுமாக, தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 17. சகோதரன் டச் (Dauch), உங்களை மறுபடியும் பார்ப்பது மிகவும் நல்லது. உங்களை இங்கு பார்ப்பது மிகவும் அருமையானது. சகோதரி எங்கே? உள்ளே இருக்கிறார்களா? (“இங்கேதான் என்று சகோதரன் டச் கூறுகின்றார்.” - ஆசி.) ஓ, அது நல்லது. ஓ ஆமாம், நான் உங்களை சரியாக நேரில் பார்க்கிறேன். எப்படி உள்ளீர்கள்? (“நன்றாக உள்ளேன்” என்று சகோதரி கூறுகிறார்கள்.” - ஆசி.) ஓ, நல்லது.